Wednesday, July 27, 2011

பிரளயம்


பிரளயம் – எல்லா மதமும் வேறு பெயர்களில் ஆனால் ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என சொல்கிறது! நீங்கள் அனைவரும் அஞ்சும் வகையில் இது ஒரு கருத்தாழமிக்க மரணத்தை பற்றிய பதிவோ, மதங்களை பற்றிய பதிவோ அல்ல! 

மறுபடி நகைச்சுவை முயற்சி. 

களம் இதுதான்! நமது விஞ்ஞான அறிவால் பிரளயம் இன்று இரவு தான் என்று கணித்து விட்டோம். வெவ்வேறு துறைகளில் உள்ள மனிதர்களின் மனநிலை! அவ்வளவே!

அரசியல்வாதி: அப்போ இனிமே தேர்தல் எல்லாம் நடக்காதா?

குடும்பத் தலைவன்: அப்பாடா! Credit card bill, Loan EMI எதுவுமே கட்டவேணாம்.

குடும்பத் தலைவி: போன வாரமே அந்த பிஸிபேளாபாத்த சமைச்சு பாத்திருக்கலாம்.

நடிகன்: சே! என் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலராதா?

நடிகை: செத்து போன பின்னாடி Make-Up எல்லாம் கலைந்து விடுமா??

கல்லூரி மாணவன்(வி): அந்த thesis எழுதியிருக்கவே வேண்டாம்!

யுவன்: இன்னிக்கு சாயந்திரம் நம்ம ஆளு கூட ஓடி போயிடலாமா?

யுவதி: அய்யோ! அந்த சிவப்பு நிற டாப்ஸ் வாங்க நாளைக்கு போகலாம் நினைச்சது தப்பா போச்சே!

மேனஜர்: இந்த PMS Meeting இன்னிக்கே வைச்சுருந்திருக்கலாம்.

HR: அப்படினா எல்லாருமே Notice Period கொடுக்கம போயிடுவாங்களோ?

மென்பொருள் கட்டுமானர்: Cant I fix the bug and stop the execution of apocalypse?

ஒபாமா: அட நான் இந்த ரஷ்யா போயிட்டு வரலாம்னு பாத்தேன்! அதுக்குள்ளயா??

CEO: இந்த காலாண்டுதான் நல்ல லாபம் காமிக்கலாம் என்று இருந்தேன்! :(

இயக்குனர்: அப்ப எனக்கு தேசிய விருது????

எழுத்தாளர்: இன்னிக்கு தான் புது புத்தகம் வெளியிட்டேன்! வரலாறு படைக்குமுன் என் வரலாறு முடிந்து விட்டதே!

Financier: அப்ப யாரு என்னோட வட்டி எல்லாம் வாங்குவா??

தணிக்கையாளர்: அய்யோ ITRக்கு இன்னும் acknowledgement வாங்கவே இல்லையே!

வக்கீல் : இன்னிக்கு தோத்த கேசுக்கு பேசாம வாய்தாவே வாங்கி இருக்கலாம்.

மருத்துவர்: நாலாவது வார்டு நோயாளி என் கிட்ட இருந்து தப்பிச்சப்பவே நினைச்சேன் இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று!

முதியவர்: நம்ம பையனுக்கு போன் பண்ணுமா!

முதிய பெண்: யாரும் வீட்டுக்கு வெளிய போகிதிங்க கண்ணுங்களா!

பதிவர்: அட! அழிவும் அமைதியும் தலைப்புல ஒரு பதிவு எழுதிடனும்! எங்கே laptop

Facebook Addict: Update the status as “Dead”

Disclaimer: இதில் கடைசி கற்பனை மட்டும் என்னுடையது அல்ல! எங்கோ குறுஞ்செய்தியில் படித்த நினைவு!

Saturday, July 23, 2011

Harry Potter and the Deathly hollows - 2 (3D)


Expecto Less! That was the spell running in my mind when I made a decision to watch Harry Potter and the deathly hollows  - Part 2! For the persons who ask “Is ‘going for a movie’ decision such hard to take in the country of two lokpal bills?”, let me introduce myself! Am a guy who had been to theatres for  3 times till I reached the age of 22. My parents are not so much fond of cinemas and they have this strict idea of visiting theatres make children drugged to moving pictures.

When I came to Chennai, my dreamy destination was Marina. A Visit to marina confirmed it deserves such a dream and with such great piracy laws I was able to see any movies I want, on any given day. I also appreciate my brother’s knack of locating CD shops which are so consumer friendly, where you name a movie and you get the movie immediately or the next day (obviously released ones).

When I watched the Harry Potter collections (1-4) from a CD which was abandoned in my friend’s room, I got the fantasy world to live in. In the mean time James Cameroon came out with a test on my parent’s no-theatre policy. Avatar – A Motion Picture Epic! See I got two worlds now Hogwarts and Pandora! It happened on a one fine Friday evening, as planned I got an emergency call from my friend and told my manager “Emergency, I have to leave early” and reached the Mecca of Chennai theatre, Sathyam.

None after James could lure me into theatres till 2010. I visited the Hogwarts on all the 7 years in black and white and 6 in DVDs and Blue Rays. After James, it was Rajni who ordered me to visit Devi for a night show, eventually not disappointed. KO in Mayajaal is the next thing happened because of some serious misunderstanding with ex-colleagues. Please be noticed that I am introduced to torrents now and deathly hollows 1 was one of the boon I got and said to myself Deathly hollows 2 should be watched in Sathyam, specifically in Sathyam Screen.

Enough on intro, now you all are aware of the importance of my decisions on visiting theatres. Hogwarts, my fantasy world is going to be in the war. With Albus gone, 3 horcruxes being destroyed its the right opportunity to visit the theatre. Vikram, with his another magical performance stole the sathyam screen from Harry. I end up either in Santham screen or anyone of the screens in Escape which didn’t interest me because of the 40 minutes travel in MTC 21 to and fro, mylapore to Sathyam. Inox is the screen where the fitting finale in 3D is decided for me.

Being tickets booked for Friday noon show and me waking up at 11:30 AM my brunch was cancelled. In the mean time the spell was always lingering in my mind. But in certain circumstances I was forced to change the spell Expecto lesser because Emma talked in screen after very long time. Yeah! I am an Emma Watson fan. She was the first girl or female personality to achieve my desktop wall paper status.

Yawn!!!!  The trailors for forth coming movies were mind blowing and that yawn disappeared immediately. The 3D effect was the best thing happened to Harry Potter. It could have been an icing on the cake if there was a Quidditch game between Harry and Tom Riddle. That much funny Voldemort has shaped up in screen. Except in the scene where he kills one of his aide, he was never threating.

The Gringoits episode was  well shaped up. Thank God they retained the scene where Hermione in disguise of Bellatrix greets a passerby with a Good Morning! The dragon roared, set the screen on fire blasted the floor and did all the best things it could scare the viewers with 3d effect! But I wish the colour could have been a dark green or maroon  because white dragon symbolizes peace to me. 

Then comes the Aberforth, I could hardly see his face. The significance of Ariana and her relationship with Albus is just devoted (could have stressed the emotional side of Dumbledore) she did the most important thing of taking Harry back to castle. Where is Hermione? She had only one mad idea of taking a dragon ride. Oops! She is much more worth than that.  

The first Hogwarts attack was a visual treat and Grawp was missing in defense of the school compounds. The protecting charms, breakage of defense was great to watch. If Nevile had not taken Luna I would have done that for sure (as Hermione was already taken by that useless Ron).  Harry’s encounter with Helena was normal and his stunts in room of requirement with Draco is awesome! Did I miss “What is the plan Harry” and “Don’t know”. That always adds to Harry Potter.

Oh dear Severus! You ran afraid of Minerva! Amazing graphics from wand of hers! So the dark lord kills him after 2 horcruxes were destroyed and Harry decides to go behind the first living horcrux Nagini! Pretty Snake! Isn’t it? First time I am seeing Alan Rickman crying in the screen. The frame in which Harry as a baby and Snape cries over the death of Lily, Hats off Alan! 

On learning, he has to die Harry goes for Tom riddle. Now the deathly hollows is possessed by Harry. The coat, stone and wand the importance stays only with the title of movie which should have been the backbone of the script.  After all the dramatic crying by Hagrid on Harry’s nap in the war, Tom takes Harry (‘s dead body) using Hagrid as beast of burden to Hogwarts. Haven’t I read Harry was directly instructed by Nevile to kill Nagni? 

The humour of the story begins here! Tom and Harry taking a ride around Hogwarts and under going a rugby tryout decides to duel!  Damn it! He is the dark lord! He deserves more respect than what it is shown he is invincible even without horcrux by a drop out wizard. 

What happened to legendary words Avada Kedavara and Expelliarmus in final duel?  Where are the peeves? Where is the Albus portrait in headmaster room? Without these things Harry potter is incomplete.

19 years later! I planned to get outta room! Come on Dude you cant see Emma as a mother of a child! But  Daniel and Bonie shows the good work of costumer and make-up artist. The youth eyed Rupert and charmish Emma seem as children of Danny and Bonnie. If the second half could have been more gripping  this could be the best of all the eight movies.

Monday, July 18, 2011

தில்லு முல்லு 2

தில்லு முல்லு 1 மாதிரி இல்லாமல் இது மிகச் சிறிய வாக்கியங்களைக் கொண்ட ஒரு Bulleted Corporate Presentation  போல இப்பதிவு இருக்கும்! ஏனெனில் என் வலைப் புய்ப்பம் (பூ என்பதை இப்படியும் சொல்லலாம்) கொண்டு, இங்கு வரும் ஒரு சிலரைக் கூட, ஒரே விஷயத்தை வைத்தே கொல்ல எனக்கு விருப்பமில்லை!

பின் நான் 30 அடி தூரத்தில் இருந்து கவனித்த சில விஷயங்கள் மட்டும்

  1. முதல் மனிதர்! வெள்ளை சட்டை (Minister cotton என்று நினைக்கிறேன்) காக்கி காட்ராய் முழுகாற்சட்டையும் அணிந்து Rimless கண்ணாடி போல இருந்தது! அவர்தான் நாட்டமை போல! சத்தியமாக ஏதாவது ஒரு MNC இல் மிகப்பெரிய பதவியில் இருக்க வேண்டும்!
  2. அடுத்து இன்னொரு வெள்ளை சட்டை கருப்பு பை (சலசலப்பு ஏற்பட காரணமாய் இருந்தவர்) வேற யாரு நம்ம கார்க்கி! Strangerஇல் பார்த்தது போலவே இருந்தார்! அட கூட நம்ம வேதாளம்! அவரின் கனத்தை விட அதிக கனம் கொண்ட காலனி! கடல் காற்றுக்கு அஞ்சி அவ்வளவு கனமோ?
  3. 30 அடி தூரத்தில் இருந்து அவ்வளவு முகங்கள் தான் பதிந்தன! என்னை கடந்து அவர்கள் கடல் நோக்கி செல்லும் போது மொத்த எண்ணிக்கை 20. ஒருவர் மட்டும் அரைக்காற்சட்டை அணிந்திருந்தார்!
  4. சென்று வட்டமாய் நின்றனர்! என்னைப் போல சில புது வருகைகளும் உண்டு போல் இருந்தார்கள்! ஆனால் வட்டத்தினுள் அல்லது வட்டமாக! பரஸ்பர அறிமுகங்கள்! கைக்குலுக்கல்கள்! அமரும் போதும் வட்டமாகவே (கூகுள் + தாக்கம்?) அமர்ந்தனர்!
  5. முதல் சத்தம் வழக்கம் போல் ரத்தம் கார்க்கி தான் கடலலைகளுக்கு போட்டியாக கரையில் சிரிப்பலைகள்! என்னப் பேசுகிறார்கள் என்று கேட்க ஆசை!
  6. சிறு உட்பிரிவு நகைச்சுவைகள் முடிந்து! வேதாளம் வெளியே பறந்து வந்து தன் அலைப்ப்பேசி அழைப்பை முடித்து விட்டு அமர்தல், இரு சுண்டல் விற்கும் சிறுவர்களின் பாத்திர கனத்தை குறைக்காமல் திருப்பி அனுப்புதல், ஆகிய நிகழ்வுகளோடு ஒரு பொது நகைச்சுவையும் முடிந்தது!
  7. திடீரென நகைச்சுவையின் நாற்றம் என் அருகில் வீசியது, என்னவென்று பார்த்த போது நம்ம RJ மொட்ட பாஸ்கி! மாலை கடல் மணலை மகிழ்ச்சியாக்க மறுத்து தார் ரோட்டிலே கடந்து சென்றார்! அவரும் வட்டத்தை நோக்கினார்! அவரை வட்டமும் நோக்கியது! கற்றாரை கற்றாரே காமுறுவர்! பாம்பின் கால் பாம்பு அறியும்!
  8. மேலும் இரு உருவங்கள் வட்டத்தை நோக்கி வந்தன! முதல் வட்டத்தை தாண்டி (காலனிகளால் உருவான வட்டம்) இரண்டாம் பதிவர்கள் வட்டத்தை அடைந்தனர்! அட! அதில் ஒருவர் வேட்டி சட்டை! உடையாலும் தமிழ் பேசினார்!
  9. மணி 6:30: என் அலைப்பேசி சிணுங்கியது! என்னை தி-நகருக்கு அழைத்து செல்ல சில மணித்துளிகளில் ஒரு பைக் வரும்! நான் கலங்கரை விளக்கம் அருகே செல்ல வேண்டும்! அதுதான் சாராம்சம்
  10. மன கனத்தோடு வயிறு நிரப்ப கிளம்பினேன்! ரோந்து helicopter தன் இருப்பை உறுதி செய்தது ஏதோ சொன்னது போல் இருந்தது! என்னவென்று கேட்டேன்! அது கூறியது இதுதான் என்று என் பக்கத்தில் இருந்த ராட்டினம் பதில் சொன்னது!

பதில் இதுதான்
செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

Sunday, July 17, 2011

தில்லு முல்லு

தில்லு முல்லு படம் பாத்து சிரிக்காதவன் எல்லாம் ராஜ்பக்சேனு (அதான் அரக்கன்) தைரியமா சொல்லலாம்! அப்படிப் பட்ட திரைக்காவியம் அது! ஆள் மாறட்டமென்றால் இரு வேட கதாநாயகர்கள் மட்டுமே உழன்று கொண்டிருந்த தமிழ் திரையுலகின் வரைமுறையை உடைத்து எறிந்த திரைப்படம்!

அது எல்லாம் சரி அதுக்கு என்ன இப்போ? என்று கேட்பவர்கள் இந்தப் பதிவை படியுங்கள்!

நாள் 16, ஜூலை 2011 நாள்: சனிக்கிழமை

பள்ளித்தோழர்களின் சந்திப்பு ஒரு தி.நகர் உணவகத்தில். அதில் ஒருவருக்கு பிறந்தநாள் சமீபத்தில் முடிந்தபடியால் அவர் விருந்து அளிப்பதாக வேறு நிகழ்ச்சி ஒரு வாரம் முன்பே நிச்சயத்தாகிவிட்டது! 12B பேருந்தைக் கூட தவறவிடலாம் ஆனால் என்னால் இந்த நிகழ்ச்சியை தவறவிட இயலாது! அப்படி நான் போகமால் இருந்தால் என் கடந்தப் பதிவே கடைப்பதிவாக இருந்திருக்கும்! கொண்டேபுடுவாங்க(பேசி, பேசாமல்)! பாசக்கார பயபுள்ளங்க!

அதே நாள் தான் பதிவர் சந்திப்பும்! மெரீனாவில் கிட்டதட்ட அதே நேரம்! சும்மா புரோகிராம் எழுதிக்கிட்டுருந்திருப்பார் நம்ம வேதாளம் அவர வேற வம்படியா வரச்சொன்னேன்! கார்கிய பாத்து வேலாயுதம் விஷயத்த உறுதி செஞ்சுடலாம்னு ஒரு நப்பாசை வேறு! என் முதல் பதிவர் சந்திப்பு வேறு! யாரையும் நேரில் கண்டதில்லை! நீ என்ன   பதிவு போட்ட அங்க போகனு நீங்க கேட்கலாம்! ஒரு வாசகனா போலமில்ல???

இப்ப புரியுதா ஏன் தில்லு முல்லு பற்றி பேசினேன் என்று! ஒரே நேரம், ஒரே மனிதன், இரண்டு இடத்திலும் இருக்க வேண்டும்! பாதி சந்திப்பில் எழுந்து வந்தால் சபை நாகரீகத்தை செருப்பால் அடித்தது போல ஆகும்! 5:15 மணிக்கு எல்லாம் மெரீனாவில் போய் அமர்ந்தாகிவிட்டது! சந்திப்பு 5:30க்கு தான்!

சந்திப்பில் பங்கு கொண்டால் நிச்சயமாக பாதியில் வரக்கூடாது வரவும் முடியாது! சந்திப்பிலே இருந்து விட்டால் நான் திரும்பி மயிலாப்பூரில் காது வைக்க முடியாது! பேசியே கொன்னுடுவாங்க! அவ்வளவு குழப்பத்திலும் பலூன் சுடும் கடைகளில் ஒரு கடையில் சுமாராக எத்தனை பலூன்கள் இருக்கு என்று எண்ணிக்கொண்டே நடந்த போது தான் அவர் என் கண்ணில் தென்பட்டார்!

30-35 வயதிருக்கலாம்! கரிய உருவம்! அதே நிறத்தில் ரவுண்ட் நெக் டீ-சர்ட், முக்கோண வடிவம் போட்டு (super man டீ-சர்ட்டில் இருக்குமே) அதில் ஆங்கில ‘சிஅதன் கீழே “Common Man” என்று வாசகம்! பளிச்! பல்ப்! நம்ம திருமாறன் ஐயா ஆர்.கே லஷ்மணின் காமன் மேன் தானே டி.பி இல் வைச்சிருப்பார் என்று என் ஷெர்லாக் மூளை என்னை தூண்டிவிட்டது!.

அவரும் காந்தி சிலை (அது தான் சந்திப்பு நடக்கும் இடம்) இருக்கும் திசையை நோக்கியே நடந்தார்! நானும் பின்தொடர்ந்தேன்! அலைப்பேசி சிணுங்கியது (அவரோடது)! ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென உரக்க பேசத் தொடங்கினார்! பாரீஸ் தானே தோ கிளம்பி வரேன். சென்றும் விட்டார் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! (காத்து இறங்கி போச்சு)!

விடுடா! வீரனுக்கு இதெல்லாம் சகஜம் அப்படினு காந்தி பின்னாடி போய் அமர்ந்தேன்! அப்போதுதான் கவனித்தேன்! மத்திய வயதில் இருக்கும் சில கனவான்கள் அங்கு தென்பட்டனர்! பத்து பேர் கொண்ட கூட்டம் அது! பிடிச்சாச்சு டா பிளாகர்ஸ என்று என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே திரும்பும் போது, ‘Excuse me’ என்றொரு குரல்! இனி கொஞ்ச நேரம் ஆங்கிலம் ஏன்னா அதுதான் நடந்தது!

Mr.X (A North Indian with luggage in his hands!): Excuse me! Do u understand English?

Me: Yes. How could I help you?


Mr.X Do u understand Hindi?

Me: Nope! Sorry.


Mr. Y (Another guy with bigger luggage than Mr.X had): Do u know any place where we can keep our luggages safely? We need to have a walk and cant carry them around!

Me: If u r looking for a cloak room, I m Sorry. I can’t help you. There is no such facility here in this place

Mr Y: Thx! We need to go to central station We have a train to catch at 8:00 PM.

My Mind voice: Do u wanna ve a walk or go to central station! Am sufficiently irritated! Don’t try more pl!

Me: Ok! U need to get to light house railway station and reach central!

Mr X: No we wanna go by bus

My Mind voice: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Me: Then cross the road get any bus which goes to broadway u can go to central!

Mr.X & Mr.Y: Thanks!

நான்: ஹி! ஹி!

திரும்பி அந்த 10 பேர் குழுவைப் பார்த்தேன்! இன்னும் சில தலைகள் கூடி இருந்தது! ஒரு சிறிய சலசல்ப்பு! வெள்ளை சட்டையும் ஜீன்சும் அணிந்த ஒரு உருவம்! பின்னால் ஒரு கருப்பு பை!

தொடரும்!!!!!!

Saturday, July 16, 2011

அவளுக்கொரு பாமாலை


July 1, 2011
1.தமிழ் இலக்கணம் தவறியது! 
'ம்என்பது மெய்யெழுத்தாம்!
எனக்கு உயிர் கொடுத்த உயிரெழுத்து அல்லவா அது?
 
2.பெண்ணே நான் உனைக் கண்ட வினையைத்தான்
விழித்தேன் என்றார்களோ?! விழியில் தேன்!
 
3. நீ ஆமென்றால் உண்மை இனிமை!
 இலை என்றால் உண்மை கடுமை!
உண்மையை இனிப்பாக்கு இனியவளே!
பி.கு: இந்த மூன்றில் ஒன்றுதான் என் முதல் காதல் கவிதை! எனக்கு பிடித்தது முதலில் இருக்கும் அந்தப் பா! ஏனென்றால் காதலில் வென்றவன் பா அது! இரண்டாவது மிக அழகான சிலேடை!
July 2, 2011

உனைக் கண்டு கூசுபவர்களுள் எவள் கண்டால் நீ கூசுகிறாயோ!       

அவளே இப்பாட்டுடைத் தலைவி!
 
சந்திரன் தூது சென்றது போதும்! சூரியனே இது உன் முறை!
 
நீ சென்று சொல் கதிரவனின் கோடை என்னை வாட்டவில்லை

அவள் கட்டிய  தனிமை கோட்டை தான் என்னை வாட்டியதென்று!

பி.கு: சுமார் 2:30A.M மணி அளவில் எழுதப்பட்ட கவிதை இது! சூரியனை வியந்து ஏதேனும் எழுத முற்பட்ட போது வந்து விழுந்த எண்ணம் காதல்! நிரஞ்சன் பாரதி இதை facebookஇல் like போட்டார்! பாரதியின் ரத்ததுக்கு பிடித்த கவிதை என்பதால் இதற்கு எப்போதும் என் நினைவில் தனி இடம் உண்டு.

July 16, 2011
1.காதல்! காதல்! காதல்!
  காதல் போயின்,
  இரண்டாம் காதல்! இரண்டாம் காதல்! இரண்டாம் காதல்!


2.மாதம் ஒரு முறை வருவது New moon day!
   தவறென்று சொல்லுங்கள்!
   அவள் பிறந்தநாள் மட்டும் தான் New moon day!

3. பூமிக்கும் நிலவுக்கும் இடையே சூரியந்தான் கிரகணமாம்!
    முட்டாள் விஞ்ஞானிகள்!
    எனக்கும் அவளுக்கும் இடையே அவள் அண்ணன்!
    அதுதானே கிரகணம்!


4. என் முகம் பார்க்க கண்ணாடி எதற்கு?
   அவள் முகம் போதுமே!
   அவள் சிரித்தால் நான் அழகாய் இருக்கிறேன்!

5. மறைந்திருக்கும் அழகுகள் –
    தென்னை ஒலையின் பின் நிலவு, பேஸ்பாக்கில் அவள் முகம்!

6. நிலவுக்கு செல்பவனுக்கும், அவளை காண்பவனுக்கும்
    ஒரே நிலை தான்
    மூச்சடைப்பு!

7. ஊடல் அமாவாசை, கூடல் பவுர்ணமி!
    இடைப்பட்ட காலமே வளர்பிறையும் தேய்பிறையும்.

8. ஒரு முறையாவது அவளை இரவில் கண்டுவிட வேண்டும்!
     இரவில் வானத்திலும் பகலில் வையத்திலும் உலாவுகிறாளோ?


9. யாரோ அவளது முகத்தை இன்று வானத்தில் மாட்டிவிட்டார்கள்!
    அவளைக்   காப்பாற்றுங்கள்!
    ஓ! இன்று பவுர்ணமியா??

10. இறைவனிடம் இருக்கும் நகல் இயந்திரம் அற்புதம்!
      பவுர்ணமி நிலவின் பிரகாசத்தை அப்படியே நகல் எடுத்திருக்கிறான்!

11. அவள் முகப்புத்தக ஆல்பத்தில்
      திடீரென கைக்குழந்தையுடன் சில புகைப்படங்கள்!
      உறவினர் குழந்தையாம் - மாரடைப்பு

பி.கு: இவை எழுதிய அன்று பவுர்ணமி! குரு பூர்ணிமா வேறு! முதல் நாள் அன்பர் ஒருவர் என் காதல் கவிதைகள் பற்றி பேசினார். எழுதிய அன்று வேறு அன்பர் டிவிட்டரில் காதல் கவிதை படிக்கவேண்டும் என்றார்! பெரும்பாலானவை நிலாவை ஒட்டியே வரும். நிலாவும் பெண்ணும் அழகுக்கு ஆதாராமாக ஆண்டாண்டு காலமாய் இருப்பவை!

Disclaimer: இவை எல்லாம் படித்த பின் யாரந்த பெண் என்று மட்டும் கேட்காதீர்கள்! ஒரு தலைவன் தலைவியைப் எண்ணி பாடியவை என்றே கொள்ளுங்கள்! ஏனெனில் நானும் அவளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Friday, July 15, 2011

மரணமில்லா பெருவாழ்வு

Disclaimer: இந்த பதிவில் நான் பகிரப்போவது சற்று செயற்கையான செய்தியாகத் தெரியலாம்! நான் மெத்தப் படித்தவனல்ல. இதை ஏற்கனவே யாராவது சிந்தித்து எழுதி இருந்திருக்கலாம்! இது இயற்பியலும், சக்தியும், மரணமும் இணைவது பற்றியது! பலருக்கு இது பழகியதாக இருக்கலாம்! சிலரின் சிந்தைக்கு பிடிக்காத ஒரு செய்தியாக இருக்கலாம்! ஆயின் ஒன்று உறுதி Logic தவறாது! முடிந்தவரை அலுப்பில்லாமல் இருக்கும் வகையில் எழுத முயற்சி செய்திருக்கிறேன்! அது எந்த அளவு வெற்றி என்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.

Law of conservation of energy states “Energy can neither be created nor be destroyed but can be converted from one form to another”.

இயற்பியல்! நான் தவறவிட்ட மற்றொரு வரம்! என்னை தவிர்த்த மற்றொரு காதலி! அவள் என்னை சுற்றி வந்த போதெல்லாம் தேர்வு, மதிப்பெண் என்று நான் மிகச்சிறிய வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். இப்போது பணம், PMS என்று அதை விட சிறிய வட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

மேற்கூறிய அந்த இயற்பியல் விதியயை நாம் அனைவரும் வாழ்வில் ஏதாவதொரு தருணத்தில் கடந்து வந்திருப்போம்! அப்படி இன்று வரை கடந்து வராதவர்கள் இந்த பதிவைப் படிக்க தொடங்கிய போதாவது படித்திருப்பீர்கள்.

மரணம்! நம் ஐம்புலன்களும் அடங்கிய அழகிய நிலை (தட்டச்சு தவறல்ல ’ழ’கரம்தான் ‘ழு’கரமல்ல)! நாம் நினைத்த நேரத்தில் வராமல் அவள் நினைத்த நேரத்தில் வரும் திமிர் பிடித்த காதலி இவள்! இவளை மணப்பது உறுதி! ஆனால் பலர் இந்த திருமணத்தை பொருத்தவரை பிரம்மசாரியாகவோ (சிரஞ்சீவியாகவோ), கன்னியாகவோ இருக்கவே விரும்புகிறார்கள்!

மரணம் – பொருள் கூறுக (1 மதிப்பெண்)

விடை: உயிர் உடலை விட்டு விலகுதல்

பி.கு: உயிர் என்பது ஒரு சக்தி (energy) என்பதை ஒத்துக்கொள்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். ஏனையோர் gnr.0404@gmail.com என்ற முகவரிக்கு ”நீ ஒரு முட்டாள்” என மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும் (ஒரு கணக்கு வேணுமில்ல).

இந்த சக்தியில்தான் மரணமும் இயற்பியலும் சங்கமிக்கிறது.

ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம்! ஒரு நாளைக்கு 100 பாக்கெட்டுகள் சிப்ஸ் தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! ஐந்து வருடங்களுக்கு பின் அது இறந்து விடுகிறது. அதாவது scrap செய்து விடுகிறார்கள்! தனது வாழ்நாளில் 401,700 பாக்கெட்டுகள் தயார் செய்கிறது! அது தயாரித்த ஒவ்வொரு சிப்ஸிலும் அதன் சக்தி பகிரப்பட்டிருக்கிறது! அதற்கே வேறு சில சக்திகள் கூட பயன்பட்டு இருக்கின்றது! தண்ணீரின் சக்தி, மின்சார சக்தி, எண்ணையின் சக்தி! இவை எல்லாம் சேர்ந்து சிப்ஸின் சக்தியாக மாறி இருக்கின்றன.

ஆக இந்த இயந்திரத்தின் சக்தி தற்போது சிப்ஸின் சக்தியாக உருமாற்றம் அடைந்திருக்கிறது! எனவே அந்த சிப்ஸை உண்ட பின் அதனால் கிடைக்கும் சக்தியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அந்த சக்தி பகிரப்படுகிறது. அந்த இயந்திரத்தின் இயக்கம் நின்று விட்டது ஆயினும் அதன் மூலமாக மாறிய சக்தி இந்த உலகில் ஏதாவதொரு உருவில் உழன்று கொண்டுதான் இருக்கிறது.

நிற்க! மேல் சொன்ன கருத்தை ஒத்துக்கொள்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். ஏனையோர் gnr.0404@gmail.com என்ற முகவரிக்கு ”நீ ஒரு அடிமுட்டாள்” என மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும் (இரண்டு கணக்குகள் வேணுமில்ல).

ஆத்மா! இந்த சொல்லை தயவு செய்து அடுத்த சில நிமிடங்களுக்கு மறந்துவிடவும்! ஏனெனில் இந்தப் பதிவில் மனிதனையும் ஒரு எந்திரமாகவே பதிவு செய்ய முற்பட்டுள்ளேன்! எப்படி அந்த சிப்ஸ் தயாரிக்கும் எந்திரம் சிப்ஸை தயார் செய்கிறதோ அதே போல்தான் நாமும் உணர்வுகளை தயார் செய்கிறோம்!

விண்ணைத்தாண்டி வருவாயா பார்க்கும் போது சிருங்காரமுமாய், வடிவேலுவை பார்க்கும் போது ஹாஸ்யமுமாய், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பார்க்கும் போது வீரமுமாய், வஸந்தின் மாயா மாயா பார்க்கும் போது அற்புதமுமாய், மெகா தொடர்களை பார்க்கும் போது அருவெருப்புமாய், நுனி நாக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினகள் தமிழைக் குலைக்கும் போது கோபமுமாய், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் தெருநாயைத் தாண்டும் போது பயமுமாய், சிரிக்கும் மழலைக் காணும் போது கருணையுமாய், தாயுடன் இருக்கும் போது சாந்தமுமாய் நம் உணர்வுகளை, உணர்வின் அதிர்வுகளை, மனித இயந்திரத்தின் சக்தியை வேறொரு உருவிற்கு மாற்றம் செய்கிறோம்!

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு சக்தியாக உருமாறிக் கொண்டே இருக்கிறது! அப்படி இருக்க சக்தியை எவ்வாறு அழிக்க இயலும். Energy cannot be destroyed. ஆதலின் நம்முடைய சக்தி என்பது அழிக்க இயலாதது!
எப்படி அந்த இயந்திரத்தின் இயக்கம் நின்ற பின்னும் அதன் சக்தியான சிப்ஸ் இந்த உலகத்தில் வேறொரு சக்தியாக மாறி மற்றொரு சக்தியுடன் சேர்ந்து பல பரிமாணங்களை அடைகிறதோ, அதே நிலைதான் மனித இயந்திரத்துக்கும் நேருகிறது!

நான் எந்த சக்தியை இயக்கத்தில் இருக்கும் வரை உருமாற்றி உலகிர்க்கு தருகிறனோ நான் அந்த சக்தியாகத்தான் இவ்வுலகில் இருப்பேன்! நான் வெறுப்பையே அதிகமாக வெளிபடுத்தி இருப்பின் என்னைக் கடந்து வந்தவர்கள் அனைவரும் அதே உணர்வை வெளிப்படுத்துவர்! அவர்களால் பாதிக்கப்படுபவர் அவரைக் கடந்து வரும் போது கோபம் என்ற உணர்வே வெளிப்படும்! 

ஆகவே நான் இந்த உலகில் வெறுப்பு என்ற உணர்வாகவே நிலைபெற்று விடுவேன்! எனது இயக்கம் நின்ற பிறகு என்னால் அதை மாற்றவும் இயலாது! எப்படி சிப்ஸ் இயந்திரம் உருளை கிழங்கை வைத்து தக்காளி சாறு தயாரிக்க இயலாதோ அது போல் நம்மால் வெறுப்பு என்ற கிழங்கை வைத்து மகிழ்ச்சி என்ற சாறை தயாரிக்க இயலாது!

அதுவே நான் அன்பை பெரிதும் வெளிபடுத்தி இருந்திருந்தால், அன்பின் சக்தியாக, கருணையின் சக்தியாக, நிம்மதியின் சக்தியாக, சாந்தத்தின் சக்தியாக, ஹாஸ்யத்தின் சக்தியாக இந்த உலகில் நிலை பெற்று விடுவேன்.

இயந்திரம் நம்மிடம் உள்ளது, அதனை இயக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது! நாம் செய்ய வேண்டியது அதன் (நம்) மூலமாக ஒரு சக்தியயை மாற்றி கொடுப்பதுதான்!

நான் உருவாக்கும் சக்தி வெறுப்பாக இருப்பின், அது அடையும் சக்தியும் வெறுப்பாகவே இருக்கும்! இயந்திர இயக்கம் நின்ற பிறகும், என் மரணத்துக்கு பிறகும் நான் என்னுடைய வெறுப்பாகவே இவ்வுலகில் மரணமின்றி சிறுமையான வாழ்வு வாழ்ந்துக் கொண்டே இருப்பேன்.

நான் உருவாக்கும் சக்தி அன்பாக இருப்பின், அது அடையும், அணையும் சக்தியும் அன்பாகவே இருக்கும். அது பரவும் பரப்பும் சக்தியும் அன்பாகவே இருக்கும்! இயந்திர இயக்கம் நின்ற பிறகும், என் மரணத்துக்கு பிறகும் நான் என்னுடைய அன்பாகவே இவ்வுலகில் மரணமின்றி பெருமையான வாழ்வு வாழ்ந்து கொண்டே இருப்பேன்.


Monday, July 11, 2011

பெண் விடுதலை

நாள்: 29 டிசம்பர் 1961 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்

வானொலி: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

(அரக்கு தாவணியில் மல்லி முழமொன்று தலையில் சூடி)

வைஷ்ணவி: அப்பா! பொழுது போகல! வருகிறீர்களா பார்த்தசாரதி கோவிலுக்குப் போய்ட்டு பெருமாளை சேவிச்சுட்டு வரலாம்

தந்தை: சரி வாம்மா குழந்தை! போய்ட்டு வரலாம்.
==========================================================================
 நாள்: 31 டிசம்பர் 1971 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்

வானொலி: அழகிய தமிழ் மகள் இவள்!

(வெளிர் நீல பருத்தி சல்வாரில் மெல்லிய மல்லி சரமொன்று சூடி)

மின்னல் கொடி: அப்பா! பொழுது போகல! வரீங்களா பீச்சுக்கு போய்ட்டு காத்து வாங்கிட்டு வரலாம்

தந்தை: சரி வாம்மா! போய்ட்டு வரலாம்.
==========================================================================
நாள்: 25 டிசம்பர் 1981 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்

டேப்  ரிக்கார்டர்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே

(கிளி பச்சை ஷிபான் சல்வாரில் ஒற்றை ரோஜா தலையில் சூடி)

செல்வி: அப்பா! பொழுது போகல! காபி சாப்பிட சரவண பவன் போலாம்னு இருக்கேன்! வரீங்களா?

தந்தை: சரி வா! போலாம்! உங்க அம்மா காபிலேந்து தப்பிசாச்சு!
==========================================================================
நாள்: 27 டிசம்பர் 1991 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: மதராஸ்

டேப்  ரிக்கார்டர்: போவாமா ஊர்கோலம்!!

(சாம்பல் சல்வாரில் தோள் நீள கேசம்)
ப்ரியா: Daddy! நானும் பெரண்ட்ஸும் சேர்ந்து சினிமா போறாம்! போயிட்டு வரேன்பா

தந்தை: பாத்து மா பத்திரம்!

அம்மா: யேய்! துப்பாட்டவ விட்டுட்டு போற பாரு! எடுத்துட்டு போ!

ஒரு ரிங்கில் தொலைபேசி கட்டாவதை யாராவது கவனித்தீர்களா?? ==========================================================================
நாள்: 28 டிசம்பர் 2001 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: சிங்கார சென்னை

சிடி ப்ளேயர்: வசீகரா! என் நெஞ்சினிக்க

(நீல ஜீன் பேண்ட், பிங்க் டீ-சர்டில் “Solve me”, பாய் கட்)

அனிதா: Dad! Am on a date! May come back late! Bye!

தந்தை: ??????

==========================================================================

நாள்: 6 ஜீலை 2011 கிழமை: வெள்ளி
நேரம்: 5 மணி இடம்: சிங்கார சென்னை

I-Pod (in headset): We don’t care what people say, we know the truth...


(நீல ஜீன் ஷார்ட்ஸ், ஸ்லீவ்லஸ்ஸில் கருப்பு டாப்ஸ்)

Aaloka sends a SMS to her father

Dude (Read dad)! Am gonna outing! May not turn up till Sunday eve! Luv u dad!


==========================================================================

Friday, July 8, 2011

என் மரண சாசனம்

அலை கடலனெ திரண்டிருக்கும் அன்பு பெருவுள்ளங்களே!

எல்லோருக்கும் ஆசை ஒன்று இருக்கும்!  அதாவது ஆசை என்று ஒன்று இருக்கும் அது அரசியல்வாதிகளின் கொள்கைப் போல பல வகைப்படும்!

அப்படித்தான் வந்தது இந்த ஆசைகள்! இரவு 1:00 A.M (technicalலா அதிகாலை)! Harry Potter படம் பார்க்க வேண்டும் அப்புறம் சாவு என்பதை பார்க்க வேண்டும்! முதலாம் ஆசையை பேஸ்புக்கிலும், இரண்டாம் ஆசையை டிவிட்டரிலும் பதிய வேண்டும் என் மூளையின் விளம்பரப் பிரிவு ஆசைப்பட்டது!

அதெல்லாம் வேறு இருக்கா அதுக்கு பிரிவுகள் வேறு இருக்கா என குதர்க்கம் செய்யாது பதிவை திகிலோடு படியுங்கள்! ஓ! அதைக் கூற மறந்து விட்டேன் இது ஒரு கருமையான (அதாங்க dark) பதிவு! ஏற்கனவே டிவிட்டரில் டீவிட்டுக்களாகவும், பேஸ்புக்கில் நோட்டாகவும் வெளியிட்டு ரீடுவீட்டோ, கமெண்ட்ஸோ இல்லாமல் flop ஆகி பாலா சேதுவை வெளியிட்டது போல் மறுவெளியீடு செய்கிறேன்.

உட்பொருளுக்கு போகுமுன் ஒரு சிறிய குறிப்பு. பசி, தீமை இந்த இரண்டையும் உலகு கடத்த வேண்டும் என்பது என் பேராசை. அதன் முதல் படியாக எனக்குள் இருக்கும் தீமையை துரத்துவதர்க்கு முயன்று கொண்டிருக்கிறேன்.

இனி கவிதை! இல்லை இது உரைநடை என்போர்க்கு இது உரைநடை! ஆனால் எனக்கு இது மரண சாசனம்.

தீயே உன்னால் நான் அமைவேனாயின், நான் தீமை எண்ணிய மூளை அணுக்களை முதலில் சுட்டெறி!! ஒரு வினாடியேனும் தன்னுள் தீதின்றி இருக்க ஆசை!!

நீரே பிரளயத்தில் உன்னால் நான் மூழ்குவேனாயின் என் மூச்சுக்குழலில் "Lake Vanda" நீரை செலுத்து! என் சாவாவது சுத்தமாய் இருக்கட்டும்!

காற்றே என்னை காலனிடம் நீயே கொண்டு செல்வாயின் நான் நிலையானவன் என்ற அகங்காரத்தின் ஒப்பாரியை சிறிது நேரம் நான் கேட்கும் படி ஒலி பரப்பு!

வானமே நீயே என் வாழ்வை வீழ்த்துபவனாயின் உன் மின்னலை கொண்டு மாலத்திலிருந்து மீட்டெடுத்து போ! என் முற்றுப்புள்ளி வலி அல்ல ஒளி!

பூகம்பத்தால் பூவுலகை விட்டு புறப்பட்டால், பூமியே என் பூதவுடலை நீ புறந்தள்ளாமல் புழுக்களுக்கு பிண்டமாக இட்டு விடு! அசைவம் புழுக்களுக்காக மட்டும்தான்!

 பி.கு:  இறப்பதற்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் எனக்கு பிடித்தவை இவ்வைந்தும்